தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சாம்பியன் ஆப் பியூச்சர்(“Champions of Future”)அகாடமியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பைக் பந்தய வீரர் ரெஹான் கான் ரஷீத்க்கு தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளையின் மூலம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ஆகியோர் உடனிருந்தனர்.