மே.இ.தீவுகள் அபார வெற்றி

ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘சி’ பிரிவில் உள்ள இங்கிலாந்து – மே.இ.தீவுகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.

ஷெர்பேன் ரூதர்போர்டு 42 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் விளாசினார். ஜேசன் ஹோல்டர் 17 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34, ஜேசன் ஹோல்டர் 33, ஷிம்ரன் ஹெட்மயர் 23 ரன்கள் சேர்த்தனர்.

இங்கிலாந்து அணி சார்பில் ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷித் ஆகியேர் தலா 2 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், சாம் கரண் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.

அந்த அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து 19 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் மே.இ.தீவுகள் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி தரப்பில் சாம் கரண் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் சேர்த்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேக்கப் பெத்தேல் 33, பில் சால்ட் 30, ஜாஸ் பட்லர் 21, டாம் பான்டன் 2, கேப்டன் ஹாரி புரூக் 17 ரன்கள் எடுத்தனர்.

வில் ஜேக்ஸ் 2, ஜேமி ஓவர்டன் 5, ஜோப்ரா ஆர்ச்சர் 6, லியாம் டாவ்சன் 1, ஆதில் ரஷித் 0 ரன்களில் நடையை கட்டினர். மே.இ.தீவுகள் அணி தரப்பில் குடகேஷ் மோட்டி 3, ராஸ்டன் சேஸ் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top