ஐசிசி டி 20 உலகக் கோப்​பை​;பாகிஸ்தான் டிராமாவில் அடுத்து என்ன?

ஐசிசி டி 20 உலகக் கோப்​பை​யில் இந்​திய அணிக்கு எதிராக பிப்​ர​வரி 15-ம் தேதி நடை​பெற உள்ள லீக் ஆட்டத்தில் பாகிஸ்​தான் அணி பங்​கேற்​காது என அந்நாட்டு அரசு அறி​வித்​துள்​ளது. எனினும் இதுதொடர்பாக பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யத்​திடம் இருந்து ஐசிசி-க்கு முறைப்​படி இன்​னும் அறிவிக்கப்படவில்​லை.

இந்​நிலை​யில் டி 20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பதற்​காக சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்​தான் அணி நேற்று லாகூரில் இருந்து இலங்கை புறப்​பட்​டுச் சென்​றது. பாகிஸ்​தான் வீரர்​கள் டி 20 உலகக் கோப்பை தொடருக்​கான புதிய சீருடை​யுடன் ஓட்​டல் அறை​யில் இருந்து புறப்​படும் வீடியோவை பாகிஸ்​தான் கிரிக்​கெட் வாரி​யம் எக்ஸ் வலைதளத்தில்​ வெளியிட்டுள்ளது.

இந்​தி​யா​வுக்​கு எதி​ரான போட்​டியை பாகிஸ்​தான்​ அணி புறக்​கணித்​தால்​ அந்​த ஆட்​டத்​தில்​ இந்​தி​ய அணிக்​கு முழு​மை​யாக 2 புள்​ளி​கள்​ வழங்​கப்​படும்​. இந்​த விவ​காரத்​தில்​ பாகிஸ்​தான்​ அணி மீது நிதி ஆதா​ரங்​கள்​ தொடர்​பான தடைகளை வி​திக்​கும்​ அதி​காரம்​ ஐசிசி-​யிடம்​ உள்​ளது.

பாகிஸ்​தான்​ போட்​டியை புறக்​கணிப்​ப​தாக கூறியிருந்தாலும்​ போட்​டி நடத்​த திட்​ட​மிடப்​பட்​டுள்​ள நாளில்​ இந்​தி​ய அணி​யின்​ கேப்​டன்​ டாஸ்​ போடு​வதற்​கு களத்​துக்​குச்​ செல்​ல வேண்​டும்​. இதற்​காக இந்​தி​ய அணி, இலங்​கைக்​கு பயணிக்​கும்​. அங்​கு டாஸ்​ நிகழ்​வில்​ சூர்யகுமார்​ யாதவ்​ பங்​கேற்​பார்​. பாகிஸ்​தான்​ அணி​யின்​ கேப்​டன்​ சல்​மான்​ அலி ஆகா டாஸ்​ நிகழ்​வுக்​கு வரவில்​லை என்​றால்​ அந்​த அணி வெளி​யேறிய​தாக முடிவு செய்​து, நடுவர்கள்​ இந்​தி​யா​வுக்​கு 2 புள்​ளி​களை முழு​மை​யாக வழங்​கு​வார்​.

3 thoughts on “ஐசிசி டி 20 உலகக் கோப்​பை​;பாகிஸ்தான் டிராமாவில் அடுத்து என்ன?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top