சென்னை
சென்னை செங்குன்றம் எடப்பாளையத்தில் உள்ள கோஜன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் அண்ட் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் புதிதாக கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோஜன் கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் வி.வி.குமார், தமிழக முன்னாள் வீரர் ஏ.ஜி.சத்விந்தர் சிங் ஆகியோர் மைதானத்தை திறந்துவைத்தனர்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பி.அசோக் சிகாமணி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம்.பிரதாப், கோஜன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி.நடராஜன், துணைத் தலைவர் என்.
விஸ்வநாதன் டிஎன்சிஏ துணைத் தலைவர் ஆடம் சையத், செயலாளார் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் டி.ஜே.சீனிவாசராஜ், துணைத் செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.