இந்தியாவுக்கு சாம்பியன் டிராபியை வென்று தந்து விட்டார் கேப்டன் ரோகித் சர்மா. ஆனால் 37 வயதான அவர் இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியானது.
கோப்பையை வென்ற பிறகு அளித்த பேட்டியில் நான் ஓய்வு பெறப்போவதில்லை. எனவே அது தொடர்பான வதந்தியை நிறுத்துங்கள் என்று ரோகித்சர்மா கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில்,’ ரோகித் சர்மா ஓய்வு பெற எந்த காரணமும் இல்லை . அவர் இந்திய கேப்டன்களில் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கேப்டன்களில் ஒருவராக மாறக்கூடும்.

ஏனெனில் மற்ற கேப்டன்களுடன் ஒப்பிடும்போது, ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதத்தைப் பாருங்கள். அது கிட்டத்தட்ட 74 சதவிகிதம். இது கடந்த கால கேப்டன்களை விட கணிசமாக அதிகம். அவர் கேப்டன் பதவியில் தொடர்ந்து நீடித்தால், எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் கேப்டன்களில் ஒருவராக இருப்பார்.
ஏனெனில் அவர் தான் ஓய்வு பெறவில்லை என்று தெரிவித்து விட்டார். அவர் கேப்டனாக மட்டுமல்ல, ஒரு பேட்டராகவும் ஓய்வு பெறுவார். ஏனெனில் இதுவரை இந்தியாவுக்கு ஒரு அற்புதமான தொடக்கத்தை அளித்தார். வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். அவரை விமர்சனம் செய்ய எந்த காரணமும் இல்லை.
அவரைப்பற்றி அவரது சாதனை பேசுகிறது. அது மட்டுமல்லாமல், அவர் தனது ஆட்டத்தை மாற்றியமைத்துள்ளார். பவர்பிளேயில் அவரது ஸ்டிரைக் ரேட்டைப் பார்த்தால், அது ஒரு ஓபனிங் பேட்டருக்கு மிகவும் குறைவாக இருந்தது.
ஆனால் 2022 முதல் அவரது ஸ்ட்ரைக் ரேட் முதல் பவர்பிளேயில் 115 ஆக உயர்ந்துள்ளது. அதுதான் நல்ல மற்றும் சிறந்த வித்தியாசம்’ என்றார்.