race

சென்னையில் இன்று கார் பந்தயம்

சென்னை

ஆசிய பசிபிக் ராலி சாம்பியன்ஷிப்பின் ஆசிய மண்டல போட்டி சென்னை இருங்காட்டுக் கோட்டையில் இன்று (ஏப்ரல் 25-ம் தேதி) தொடங்கி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஆசிய பசிபிக் ராலி சாம்பியன்ஷிப்பின் இந்திய போட்டியின் நடப்பு சாம்பியன்களான ஆர்கா மோட்டார்ஸ்போர்ட்ஸின் ஹரிகிருண்ஷன் வாடியா, குணால் காஷ்யப் மற்றும் தேசிய சாம்பியன்களான கர்ணா கடூர், மூசா ஷெரிப் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த போட்டியில் 21 பேர் கலந்துகொள்வதை உறுதி செய்துள்ளனர். இந்தியாவில் நடைபெறும் ஆசிய பசிபிக் ராலி சாம்பியன்ஷிப்பில் அதிக போட்டியாளர்கள் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும். இந்தத் தொடருடன் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் ஏற்பாடு செய்துள்ள எஃப்எம்எஸ்சிஐ இந்து சந்தோக் நினைவு கோப்பை தொடரும் நடைபெறுகிறது.

இந்தத் தொடரில் முன்னாள் இந்திய ராலி சாம்பியனும் இஆர்சி சுற்று வெற்றியாளருமான அமித்ராஜித் கோஷ், 2019 இந்திய ராலி சாம்பியன் சேத்தன் ஷிவ்ராம் மற்றும் இணை ஓட்டுநர் இ.சிவபிரகாஷ் மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த நவீன் புலிகில்லா ஆகியோரும் கடும் சவால்களை அளிக்கக்கூடும்.

சமீபத்தில் உலக ராலி சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியான கென்ய ராலி சாம்பியன்ஷிப்பின் RC3 கிளாசை சென்ற நவீன், அர்னவ் பிரதாப் சிங், ரோஹித், ஜான்சன் சல்தான்ஹா, பி.வி.எஸ் மூர்த்தி ஆகியோரும் கவனிக்கப்பட வேண்டிய மற்ற ஓட்டுநர்களாக இருப்பார்கள்.

21 பேரில் சிம்லாவைச் சேர்ந்த அனுஷ்ரியா குலாட்டி மட்டுமே வீராங்கனையாவார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜீத் ஜாபக் பந்தயத்தில் ஹூண்டாய் I 20-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top