பாரிஸ்
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் வரும் 25-ம் தேதி பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 170-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சுமித் நாகல், 225-வது இடத்தில் உள்ள ஆஸ்திரியாவின் ஜூரிஜ் ரோடியோனோவுடன் மோதினார். இதில் சுமித் நாகல் 2-6, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.