felming

பதிரனாவை நம்பி மோசம் போயிட்டோம் !

புதுடெல்லி

சிஎஸ்கே வீரர் மதீஷா பதிரனா தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 188 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 17 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டது.

சிஎஸ்கேவுக்கு இது 10-வது தோல்வியாக அமைந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 10 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ள சிஎஸ்கே தனது கடைசி ஆட்டத்தில் வரும் 25-ம் தேதி குஜராத் டைட்டன்ஸுடன் மோதுகிறது.

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் சிஎஸ்கே அணி லீக் சுற்றை கடைசி இடத்துடனே நிறைவு செய்யும். ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சிஎஸ்கே கடைசி இடத்துடன் தொடரை நிறைவு செய்ய உள்ளது இதுவே முதன்முறையாகும்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீன் பிளெமிங் கூறியதாவது:

வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனா மீது அதிக எதிர்பார்ப்புகளை வைத்திருந்தோம். அதனால்தான், அவரை அணியில் தக்கவைத்தோம். சிறிது காலமாக ஃபார்மில் இல்லாத அவர், தற்போதுதான் ஓரளவுக்கு மீண்டு வந்துள்ளார்.

பந்துவீச்சில் அவர், சில மேம்பாடுகளை செய்துள்ளார். ஆனால் அவர் நினைக்கும் அளவுக்கோ அல்லது நாங்களோ எதிர்பார்த்த அளவுக்கோ முன்னேற்றம் இல்லை. அதனால், பதிரனா தன்னை இன்னும் மேம்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது

பதிரனா தற்போது பேட்ஸ்மேன்கள் நன்றாக விளையாடும் காலத்தில் இருக்கிறார். அவர், தனது முதல்தர கிரிக்கெட் வாழ்க்கையில் என்ன செய்தாரோ அதை திரும்பவும் செய்ய வேண்டும். அவர் பந்துவீசும் முறை தனித்துவமானது. ஆனால், தற்போது அவரால் அந்தமாதிரி வீச முடிவதில்லை.

இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top