மாா்க்ரம் விளாசலில் தென்னாப்பிரிக்கா வெற்றி

டி20 உலகக் கோப்பை கிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 57 ரன்கள் வித்தியாசத்தில் கனடாவை வீழ்த்தியது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் தென்னாப்பிரிக்கா 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.

கேப்டன் எய்டன் மாா்க்ரம் 10 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்கள் விளாசினார். டி காக் 25, ரிக்கெல்டன் 33, டெவால்ட் பிரேவிஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இறுதிக்கட்ட ஓவர்களில் டேவிட்ல்லா் 1 பவுண்டரி, 3 சிக்ஸா்களுடன் 39 ரன்களும் ஸ்டப்ஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 34 ரன்களும் விளாசினர்.

கனடா தரப்பில் அன்ஷ் படேல் 3, தில்பிரீத் பாஜ்வா 1 விக்கெட் சாய்த்தனா். 214 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கனடா அணி 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்களே எடுத்து தோல்வி அடைந்தது.

அதிகபட்சமாக நவ்னீத் தலிவால் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 64 ரன்கள் சேர்த்தார். கேப்டன் தில்பிரீத் பாஜ்வா 0, யுவராஜ் சம்ரா 12, நிகோலஸ் கிா்டன் 4, ஷ்ரேயஸ் மோவா 9, ஹா்ஷ் தாகா் 33, சாத் பின் ஜாஃபா் 11, ஜஸ்கரன் சிங் 0 ரன்களில் வெளியேறினார். தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி நிகிடி 4, மாா்கோ யான்சென் 2, ககிசோ ரபாடா, காா்பின் பாஷ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

3 thoughts on “மாா்க்ரம் விளாசலில் தென்னாப்பிரிக்கா வெற்றி”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top