நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி – ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த தெ.தி.இந்து கல்லூரி அணி 25 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மைக்கேல் ராய் வியான்னி 47 ரன்கள் எடுத்தார்.
ஸ்காட் அணி தரப்பில் அருள் ஆல்சன், சகாய பென்னி ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். 152 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அணி 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
அதிகபட்சமாக சஞ்சய் 74 ரன்கள் விளாசினார். வெற்றி பெற்ற அணிக்கு கன்னியாகுமரி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார், உடன் கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.