MI_win

எல்லோரும் தூள் கிளப்பிட்டாங்க.. ஹர்திக் பாண்டியா !

மும்பை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர்.

ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29, திலக் வர்மா 6, கேப்டன் ஹர்திக் பாண்டியா 5, நமன் திர் 25 ரன்கள் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மயங்க் யாதவ் 2 விக்கெட்களையும், அவேஷ் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35, மிட்செல் மார்ஷ் 34, நிகோலஸ் பூரண் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13 ரன்கள் சேர்த்தனர். எய்டன் மார்க் ரம் 9, கேப்டன் ரிஷப் பந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். வில் ஜேக்ஸ் 2, கார்பின் போஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அதேவேளையில் இந்த சீசனில் தொடர்ச்சியாக 5வது வெற்றியை பதிவு செய்தது. 5 வருடங்களுக்கு பின்னர் தற்போதுதான் மும்பை அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை குவித்துள்ளது.

கடைசியாக அந்த அணி 2020ம் ஆண்டு சீசனில் தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றிருந்தது. தற்போதைய வெற்றியின் மூலம் மும்பை அணி 12 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறியதாவது:

எங்களிடம் இருந்த உத்வேகத்தை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம். எல்லோரும் சிறப்பாக செயல்பட்டார்கள். போட்டியை காண வந்த பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் எங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கினர், நாங்கள் அவர்களுக்காக வெற்றி பெற்றோம், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொருவரும் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டே இருந்தனர்.

கார்பின் போஷ் களமிறங்கிய உடனே சிக்ஸர்களை அடித்தார், அனைவரும் தங்களது பங்களிப்பை வழங்கினார்கள். பந்துவீச்சாளர்கள் சரியான திசையில் வீசினார்கள். எல்லோரும் பங்களிப்பை வழங்கும் போது சிறந்த அணிகள் ஒரே மாதிரியாகவே இருக்கும்.

கார்பின் போஷ் பந்து வீச சிறந்த வாய்ப்பு கிடைத்தது. இந்த தொடர் மிகவும் கடினமானது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், எப்போதும் அடுத்த ஆட்டத்திற்கு தயாராக வேண்டும், முன்னோக்கி செல்லும் உத்வேகத்தைத் தொடர வேண்டும்.

இவ்வாறு ஹர்திக் பாண்டியா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top