இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகலே மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. பவன் ரத்னாயகே 40, கமில் மிஷாரா 36, பதும் நிசங்கா 34, குஷால் மெண்டிஸ் 32, சரித் அசலங்கா 28 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதையடுத்து இங்கிலாந்து அணி பேட் செய்த நிலையில் மழை குறுக்கீடு காரணமாக 17 ஓவர்களில் 168 ரன்கள் சேர்க்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாம் பேன்டன் 54, ஜாஸ் பட்லர் 39, கேப்டன் ஹாரி புரூக் 36, சேம் கரண் 20 ரன்கள் விளாசினர்.
6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என தன்வசப்படுத்தியது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

