புதுடெல்லி
டி20 கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள் மைல்கல்லை தோனியும், சஞ்சு சாம்சனும் எட்டியுள்ளார்கள்.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ரியான் பராக் வீசிய பந்தில் தோனி சிக்ஸர் விளாசியிருந்தார். டி 20 கிரிக்கெட்டில் தோனி விளாசிய 350-வது சிக்ஸராக இது அமைந்தது.
இதேபோன்று ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கின் போது அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டி 20 போட்டிகளிலும் சாம்சனும் 350 சிக்ஸர்களை விளாசியவர்களின் பட்டியலில் இணைந்தார்.
இந்த வகை சாதனையில் இந்திய வீரர்களில் ரோஹித் சர்மா (542), விராட் கோலி (434), சூர்யகுமார் யாதவ் (368) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர்.