அகமதாபாத்
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 203 ரன்கள் குவித்தது. அபிஷேக் போரெல் 18, கருண் நாயர் 31, கே.எல்.ராகுல் 28, அக்சர் படேல் 39, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 31, அஷுதோஷ் சர்மா 37 ரன்கள் சேர்த்தனர்.
204 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 04 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஜாஸ்பட்லர் 54 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். சாய் சுதர்சன் 21 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டு 34 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 43 ரன்களும் விளாசினர்.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் அந்த 10 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. 7 ஆட்டங்களில் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் 5 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதேவேளையில் டெல்லி கேப்பிடல்ஸ் இந்த தோல்வியால் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
அந்த அணி 7 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்விகளை பெற்றுள்ளது. இரு அணிகளும் 10 புள்ளிகளை பெற்றுள்ள போதிலும் நிகர ரன் ரேட் அடிப்படையில் குஜராத் முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் நிகர ரன்ரேட் 0.984 ஆக உள்ளது. டெல்லி அணியின் நிகர ரன்ரேட் 0.589 ஆகும்.
போட்டி முடிவடைந்ததும் டெல்லி அணியின் கேப்டன் அக்சல் படேல் கூறியதாவது:
நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இதுதான் அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தியதாக நினைக்கிறேன். நாங்கள் எப்போதெல்லாம் ரன்கள் குவிக்க வேண்டும் என நினைத்தோமோ அப்போதெல்லாம் களத்தில் செட்டிலாகியிருந்த பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். இதனால் நாங்கள் உத்வேகத்தை இழந்தோம். இன்னிங்ஸை நாங்கள் நினைத்தபடி நிறைவு செய்யும் முடியாமல் போனது.
கடைசி ஓவரில் இன்னும் ஓரிரு சிக்ஸர்கள் அடித்திருந்தாலும் அவர்களை கட்டுப்படுத்தியிருக்கலாம். நாங்கள் நன்றாக பந்து வீசினோம், ஆனால் எங்கள் கேட்ச் மற்றும் பீல்டிங்கில் நாங்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும், ஆனால் நாங்கள் எங்கள் இலக்கில் குறைவாக இருந்தோம். இதுகுறித்து அதிகம் யோசிக்க ஒன்றும் இல்லை. இன்னும் என்னவெல்லாம் செய்திருக்க முடியும் என்பதை உணர்ந்து அதில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அடுத்த முறை அதே தவறுகளைச் செய்யக்கூடாது” என்றார்.