சிங்கப்பூர்
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் போட்டி தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் சபர் காரியமன் குடமா, முமகது ரேசா பஹ்லெவி இஷ்பஹானி ஜோடியை தோற்கடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதி சுற்றில் சாட்விக்-ஷிராக் ஜோடி போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள மலேசியாவின் கோ சே ஃபீ, நூர் இஸ்ஸுதீன் ஜோடியை எதிர்கொள்கிறது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற 17-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுஃபெய்யுடன் மோதினார்.
65 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 9-21, 21-18, 16-21என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் 16-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவிடம் தோல்வி அடைந்தார்.