ஐபிஎல் தொடரில் இனி பந்தை உமிழ் நீரால் ஷைனிங் பண்ணலாம்.. பவுலர்கள் ஹாப்பி!

மும்பை

கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் பந்தை பளபளப்பாக மாற்றுவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடை செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது. இந்த விதிமுறை ஐபிஎல் தொடரிலும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் மும்பையில் நேற்று ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கான தடையை நீக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு அனைத்து கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். இதனால் பந்து வீச்சாளர்கள் ஹாப்பியாக இருக்கக்கூடும். ஏனெனில் பந்தை ஷைனிங் செய்யும் போது அது ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு கைகொடுக்கும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top