இந்தியா – பாகிஸ்தான் போட்டியால் விமான டிக்கெட் கட்டணம் மளமளவென உயர்ந்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் 15-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் லீக் சுற்றில் கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தி மோத உள்ளன. இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. .
இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால் இந்தியாவில் இருந்து இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல வழக்கமாக ஏர் இந்தியா விமானத்தில் எக்னாமிக் கிளாசில் ரூ.30,000 செலவாகும் . தற்போது கட்டணம் ரூ.1.30 லட்சம் வரை உயர்ந்துள்ளது. அதேவேளையில் பிசினஸ் கிளாசில் இந்த கட்டணம் ரூ.2.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த கட்டணம் முறையே ரூ.1.39 லட்சம் எனவும், ரூ.2.09 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு செல்வதற்கு ரூ.50,000 எனவும் மும்பையில் இருந்து பயணிக்க ரூ.70,000ஆகவும் கட்டணம் நிர்ணயிப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

