திஷா பட்டானி டான்ஸ், ஸ்ரேயா கோஷல் பாட்டு
சென்னை
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த 18வது சீசனின் தொடக்க ஆட்டத்தில் அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியை எதிர்கொள்கிறது.

போட்டி 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் தொடக்க விழா நிகழ்ச்சிகளை
6 மணிக்கு ஆரம்பமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்களை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மகிழ்விப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாலை 6.30 மணிக்கு கண்கவர் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதில் நடிகைகள் ஸ்ரத்தா கபூர், திஷா பட்டானி, நடிகர் வருண் தவண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது நடனங்களால் ரசிகர்களை கிறங்கடிக்க காத்திருக்கின்றனர். மேலும் இசை மழையில் நனைக்க ஸ்ரேயாஸ் கோஷல் இனிமையான பாடல்களை பாட ஆயத்தமாகி வருகிறார்.
அவருடன் ராஃப் பாடகர் கரண் அஜூலாவும் இசை விருந்து அளிக்க காத்திருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் இம்முறை ஐபிஎல் போட்டி நடைபெறும் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், விசாகப்பட்டிணம், முலான்பூர், குவாஹாட்டி, லக்னோ, மும்பை, டெல்லி, தரம்சாலா, அகமதாபாத் ஆகிய 13 நகரங்களிலும் தொடக்க விழா போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கான பிரபல நடிகர், நடிகைகள், பாடகர்கள் லிஸ்டை பிசிசிஐ தயார் செய்துள்ளதாம். இந்த லிஸ்டில் சல்மான் கான், கேத்ரினா கைப், திரிப்தி திம்ரி, அனன்யா பாண்டே, ஜான்வி கபூர், தென்னிந்திய நடிகர், நடிகைகள், பாடகர்கள் என இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முதன்முறையாக இதுபோன்ற ஐடியாவை பிசிசிஐ கையில் எடுத்துள்ளதால் போட்டி நடைபெறும் அனைத்து கிரிக்கெட் சங்கங்களுக்கும் தேவையான ஏற்பாடுகளை கவனமுடன் மேற்கொள்ளுமாறு அறிவுரைகளை வழங்கியுள்ளதாம். இதனால் சென்னை ரசிகர்களும் கண்வர் தொடக்க விழாவை சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் கண்டுகளிக்க முடியும்.