GlroI37WMAA9epd scaled e1741698199500

சாம்பியன் டிராபியுடன் நாடு திரும்பியது ரோகித் படை

துபாயில் நடந்த சாம்பியன் டிராபி இறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி திங்கட்கிழமை நள்ளிரவில் நாடு திரும்பியது. டி20 உலக கோப்பையை வென்று 9 மாதங்களுக்குள் அடுத்த ஐசிசி கோப்பையை ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

மார்ச் 22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணியினர் மும்பை வந்தடைந்தனர். ஒரு சில வீரர்கள் மட்டும் இன்னும் வரவில்லை. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா ஆகியோர் டெல்லி வந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top