நாட்டிங்காம்
ஜிம்பாப்வே அணி கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான 4 நாட்கள் கொண்ட இந்த டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் தொடங்குகிறது.
இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி, அடுத்து நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு தயாராகுவதற்கான சிறந்த பயிற்சி ஆட்டமாக அமையக்கூடும். இங்கிலாந்து – இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் வரும் ஜூன் 20-ம் தேதி லீட்ஸ் நகரில் தொடங்குகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே – இங்கிலாந்து அணிகள் 22 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மோதுகின்றன. கடைசியாக 2003-ம் ஆண்டு இரு அணிகளும் செஸ்டர் லீ ஸ்டிரீட்டில் டெஸ்ட் போட்டியில் மோதியிருந்தன.