அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (4.4.2025) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள சென்னை ஒலிம்பிக் அகாடெமியின் மூன்றாவது தளத்தில் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை (sports science center) திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன்(எழும்பூர்), கே.எஸ்.சரவணகுமார் (பெரியகுளம்), செ.முருகேசன் (பரமக்குடி), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அசோக் சிகாமணி உள்பட அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.