ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 4-ம் நிலை வீராங்கனயைன அமன்டா அனிசிமோவா ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவுடன் மோதினார்.
ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் எலெனா ரைபகினா 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்கில் இகா ஸ்வியாடெக்கை தோற்கடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதி சுற்றில் 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் அமன்டா அனிசிமோவா, 6-ம் நிலை வீராங்கனையான சகநாட்டைச் சேர்ந்த ஜெசிகா பெகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் ஜெசிகா பெகுலா 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தார். அரை இறுதி சுறறில் எலெனா ரைபகினா – ஜெசிகா பெகுலா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

