ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று (ஏப்ரல் 8) சண்டீகரில் நடைபெற்ற சிஎஸ்கே – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக பஞ்சாப் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல்லுக்கு 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
