கேப்டன் கம்மின்ஸ் விளக்கம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்15வது ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும் இடையே நடந்தது.
டாசில் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. கொல்கத்தா அணியில் வெங்கடேஷ் ஐயர் 60(29 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), ரகுவன்சி 50(32 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் ரகானே 38(27 பந்து, ஒரு பவுண்டரி, 4சிக்சர்), ரிங்கு சிங் 32 ரன் (17 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்ததால் 20 ஓவாில் 6 விக்கெட் இழப்புக்கு200 ரன் குவித்தது.
அதை தொடர்ந்து ஆடிய நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா 2, டிராவிஸ் ஹெட் 4, இஷான கிசன் 2, நிதிஷ்குமார் 19 ரன்னில் அவுட் ஆனதால் 44 ரன்களுக்குள் 4 விக்கெட்டை இழந்து தத்தளித்தது.
தொடா்ந்து வந்த வீரர்களாலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை. சீரான இடைவெளியில் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்டுகள் சரிந்ததால் 14.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்னில் சுருண்டது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிளாசன் 33, மெண்டிஸ் 27 , கேப்டன் கம்மின்ஸ் 14 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் 80 ரன் வித்தியாசத்தில் நைட் ரைடர்ஸ் அணி வென்றது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் வருண் சக்கரவர்த்தி, அரோரா தலா 3 விக்கெட்டுகளும், ரசல் 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகன் விருது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சாளர் அரோராவுக்கு (இம்பாக்ட் பிளேயர்) வழங்கப்பட்டது. அவர் கூறும்போது, இம்பேக்ட் பிளேயராக ஆட நான் என்னைத் தயார்படுத்திக்கொள்கிறேன்.நான் உள்ளே வருவேன் என்று அவர்கள் என்னிடம் முன்பே சொல்கிறார்கள். பந்து என்ன செய்கிறது, எவ்வளவு ஸ்விங் செய்கிறது என்பதை வெளியில் இருக்கும்போது நான் பார்க்கிறேன்.
ஐந்தாவது-ஆறாவது ஓவரில், பந்து ஸ்விங் ஆகாது, அதனால் லென்த் கட்டர், யார்க்கர் என கிரிக்கெட் மாறி விட்டது. கட்டர்களும் யார்க்கர்களும் முக்கியம் பவர்பிளேயில் நன்றாக பந்துவீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்யலாம்.
ஏனென்றால் எங்களிடம் நரேன்,வருண் போன்ற சிறந்த ஸ்பின்னர்கள் உள்ளனர். எனவே நாம் 1-2 விக்கெட்டுகளை வீழ்த்தினால், அது எளிதாகிவிடும், பின்னர் நாம் போட்டியில் வெற்றி பெறலாம். அ்ந்த திட்டப்படி வென்றோம் என்றார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் அஜிங்க்யா ரகானே கூறும்போது, இந்த ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த விக்கெட்டில் முதலில் பந்துவீச விரும்பினோம். இருப்பினும் தவறுகளில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம்.
இந்த விளையாட்டில் இருந்து கற்றுக்கொள்ள எங்களுக்கு பேட்டிங் குழுவாக செயல்பட்டது சிறந்த உதாரணம். ரிங்குவும் வெங்கடேஷும் பேட்டிங் செய்தபோது, 30 பந்துகளில் 50-60 ரன்கள் எடுக்க வேண்டும்.
15 ஓவர்கள் சாதாரணமாக விளையாடி பின்னர் அந்த இலக்கை எட்டுவது எளிதானது அல்ல.ஆரம்பத்தில், இந்த விக்கெட்டில் 170-180 என்பது ஒரு நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் எங்களுக்கு கூடுதல் ரன் கிடைத்தது. அரோரா மற்றும் வருண் நன்றாக பந்துவீசினார்கள் என்றார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில், இந்த இரவு எங்களுக்கு சிறப்பான இரவு இல்லை. இது ஒரு நல்ல விக்கெட். ஆனாலும் எங்கள் பேட்ஸ்மேன்கள் எளிதாக ஆட்டம் இழந்தனர். இந்த களத்தில் வெற்றி பெற நீங்கள் யதார்த்தமாக ஆட வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, நாங்கள் 280 ஸகோர் எடுத்தோம். இன்று 200 ரன் கூட எடுக்க முடியவில்லை. எங்கள் பீல்டிங்கில் இன்னும் அதிகமாக முன்னேற்றம் வேண்டும். ஓரிரு கேட்சுகள் விட்டது ஆட்டத்தை மாற்றிவிட்டது.
மேலும் ஒட்டுமொத்த பந்துவீச்சும் மோசமாக இல்லை, அவர்கள் இறுதியில் நன்றாக பேட்டிங் செய்தனர். அதனால் ஆட்டம் கைவிட்டு போனது என்றார்.