basket ball

இந்திய கூடைப்பந்தில் புதிய லீக் அறிமுகம்!

மும்பை

இந்திய விளையாட்டுத் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் தருணத்தைக் குறிக்கும் வகையில், ACG ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்திய கூடைப்பந்து கூட்டமைப்புடன் (BFI) இணைந்து இந்தியாவின் முதல் தொழில்முறை கூடைப்பந்து லீக்கை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

இதன்படி ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் 5×5 மற்றும் 3×3 வடிவங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த லீக்கின் இயக்குநராக ஆஸ்திரேலியாவின் தேசிய கூடைப்பந்து லீக்கின் (NBL) முன்னாள் CEO மற்றும் ஆணையர் திரு. ஜெர்மி லோலிகர், ACG ஸ்போர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவர் திரு. ஆதவ் அர்ஜுனா கூறும்போது, “ACG உடனான இந்த கூட்டணி இதற்கு முன் நாம் கண்டிராதது. இது தொலைநோக்கு பார்வையால் உந்தப்பட்டு, நீண்ட கால தாக்கத்திற்காக கட்டமைக்கப்பட்டு, இந்திய கூடைப்பந்துக்கு உண்மையில் என்ன தேவை என்பது பற்றிய தெளிவான புரிதலில் வேரூன்றியுள்ளது.

நாங்கள் வெறும் காட்சித்தன்மையை மட்டுமல்ல, உண்மையான உத்வேகம் மற்றும் உலகளாவிய நம்பகத்தன்மையையும் உருவாக்குகிறோம். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்வதே எங்கள் நோக்கம் என்றார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top