பாங்காக்
தாய்லாந்து ஓபன் சர்வதேச குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் கிரண், தீபக் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான 75 கிலோ எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் கிரண் 5-0 என்ற கணக்கில் உக்ரைனின் போலினா செர்னென்னை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆடவருக்கான 75 எடை பிரிவு அரை இறுதி சுற்றில் இந்தியாவின் தீபக் 5-0 என்ற கணக்கில் தாய்லாந்தின் பீரபட் யாசுவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தார்.