trophy 2k25

கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டி..

கொல்கத்தா

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. தொடக்க பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், கரன் அஜூலா ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

Shreya

கரன் அஜூலா பாடல்களுக்கு பாலிவுட் நடிகை திஷா பட்டானி, கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் மேடையில் தோன்றினார்.

WhatsApp Image 2025 03 22 at 22.38.39

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங் ஆகியோரை மேடைக்கு அழைத்த உரையாடினார்.

அப்போது விராட் கோலியுடனும், ரிங்கு சிங்குவுடனும் தனித்தனியாக ஷாருக்கான் நடனமாடினார்.

இதன் பின்னர் 18 வருடங்களாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் விராட் கோலியை பாராட்டு அவருக்கு பிசிசிஐ சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதையடுத்து ஐபிஎல் தொடரின் 18-வது சீசனை குறிக்கும் வகையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டது. இசை, நடன நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top