இந்தூர்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்துக்கு 2-வது முறையாக இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதியும் இதேபோன்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து துகோகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் ஜிதேந்திர சிங் யாதவ் தலைமையிலான போலீஸார் ஹோல்கர் மைதானத்துக்கு வெடி குண்டு நிபுணர்களுடன் சென்று சோதனை செய்தனர்.
சோதனையின் போது மைதான ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சோதனையில் மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான எந்தப் பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.