Prannoy

பாட்மிண்டனில் பிரனாய் தோல்வி

நிங்போ

சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சீனாவின் சூ குவாங் லுவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பிரனாய் 16-21, 21-12, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான கிரண் ஜார்ஜ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அவர், தனது முதல் சுற்றில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் திமித்ரி பனாரினை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 13-21, 7-21 என்ற செட் கணக்கில் சீனாவன் ஹன் யி-யிடமும், அனுபமா உபாத்யாயா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானிடமும் வீழ்ந்தனர். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண், ரூபன் குமார் 21-3, 21-12 என்ற செட் கணக்கில் இலங்கையின் மதுகா, லகிரு வீரசிங்கே ஜோடியை வீழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top