நிங்போ
சீனாவின் நிங்போ நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய், சீனாவின் சூ குவாங் லுவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பிரனாய் 16-21, 21-12, 11-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான கிரண் ஜார்ஜ் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். அவர், தனது முதல் சுற்றில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தானின் திமித்ரி பனாரினை தோற்கடித்தார். இந்த ஆட்டம் 35 நிமிடங்களில் முடிவடைந்தது.
மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 13-21, 7-21 என்ற செட் கணக்கில் சீனாவன் ஹன் யி-யிடமும், அனுபமா உபாத்யாயா 13-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டானிடமும் வீழ்ந்தனர். ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ஹரிகரண், ரூபன் குமார் 21-3, 21-12 என்ற செட் கணக்கில் இலங்கையின் மதுகா, லகிரு வீரசிங்கே ஜோடியை வீழ்த்தியது.