சென்னை
சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவரான ஸ்ரீஹரி கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான 2 நார்ம்ஸ்களை பெற்றிருந்தார். மேலும் 2500 ரேட்டிங் புள்ளிகளை தாண்டியுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல்-ஐனில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய தனிநபர் ஆடவர் செஸ் சாம்பியன்ஷிப்பில் ஸ்ரீஹரி தனது 3-வது மற்றும் இறுதி கிராண்ட் மாஸ்டர் நார்ம்ஸை பெற்றுள்ளார்.
இதன் மூலம் அவர், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் 86-வது கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீஹரி ஆவார். அதேவேளையில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில் இருந்து உருவான 17-வது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.