பெங்களூரு
இந்தியா – உஸ்பெகிஸ்தான் மகளிர் கால்பந்து அணிகள் இடையிலான ஃபிபா சர்வதேச நட்புரீதியிலான 2 ஆட்டங்கள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் இந்திய மகளிர் அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.
56-வது நிமிடத்தில் உஸ்பெகிஸ்தான் அணி தரப்பில் தியோரகோன் கபிபுல்லேவா கோல் அடித்து அசத்தினார். இதுவே அந்த அணியின் வெற்றி கோலாகவும் அமைந்தது.
கடைசி போராடிய போதிலும் இந்திய அணியால் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. இரு அணிகளும் ஜூன் 3-ம் தேதி மீண்டும் மோதுகின்றன.