பெக்கன்ஹாம்
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20-ம் தேதி ஹெட்டிங்லியில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக நேற்று இந்தியா ஏ அணியுடன் இணைந்து இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார்கள். 4 நாட்கள் கொண்ட இந்த பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இந்திய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் கருப்பு கைப்பட்டைகளை அணிந்து அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.