பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் மூலமாக இந்தியா தனது பதிலடியைக் கொடுத்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒருவார காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி எம்.எஸ்.தோனியின் வாசகத்தை இன்ஸ்டாகிராம், எக்ஸ் வலைதளத்தில் பதிவாக வெளியிட்டுள்ளது. அதில், “நாடுதான் முதன்மையானது. மற்ற விஷயங்கள் எல்லாம் காத்திருக்கும். ஓவ்வொரு அடியிலும் தைரியம். ஒவ்வொரு துடிப்பிலும் பெருமை. நமது ராணுவத்துக்கு சல்யூட்” என கூறியுள்ளது.