பாரிஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடிகள் 2-வது சுற்றுக்கு முன்னேறின.
பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, செக்குடியரசின் ஆடம் பாவ்லாசெக் ஜோடி 7-6(8), 5-7, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ராபர்ட் கேஷ், டிரேசி ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, மெக்சிகோவின் மிகுவல் ரெய்ஸ் வரேலா ஜோடி 6-2, 6-1 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் கமிலோ யூகோ காரபெல்லி, சீனாவின் யுன்சாவோகேடே பூ ஜோடியை தோற்கடித்தது.
இந்தியாவின் யுகி பாம்ப்ரி, அமெரிக்காவின் ராபர்ட் காலோவே ஜோடி தங்களது முதல் சுற்றில் 6-3, 6-7(8), 6-3 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸ், ஜெர்மனியின் ஹென்ட்ரிக் ஜெபன்ஸ் ஜோடியை வீழ்த்தியது.