‘மே.இ.தீவு​களுக்கு எதிராக பிளான் தேவை‘

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் சூப்பர் 8 சுற்​றில் நேற்று முன்​தினம் ஜிம்​பாப்வே அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்திய அணி 72 ரன்​கள் வித்தியாசத்​தில் வெற்றி பெற்​றது. இந்த வெற்​றியின் மூலம் இந்திய அணி அரை இறு​திக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்பை தக்​க​வைத்​துக் கொண்டது.

நாளை (மார்ச் 1-ம் தேதி) கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இந்​திய அணி, இரு முறை சாம்​பிய​னான மே.இ.தீவு​களை எதிர்​கொள்​கிறது. இது இரு அணி​களுக்​குமே சூப்​பர் 8 சுற்​றில் கடைசி ஆட்​டம் ஆகும்.

இந்த சுற்​றில் இரு அணி​களும் தலா 2 ஆட்​டங்​களில் விளையாடி ஒரு வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் தலா 2 புள்ளிகளை பெற்​றுள்​ளன. இதனால் கொல்​கத்தா போட்டியில் வெற்​றியை வசப்​படுத்​தும் அணியே அரை இறு​திக்கு தகுதி பெறும்.

இந்​நிலை​யில் இந்​திய கிரிக்​கெட் ஜாம்​ப​வா​னான சுனில் கவாஸ்​கர் கூறிய​தாவது: 

மே.இ.தீவு​​கள் அணி முற்​றி​லும் மாறு​பட்ட சவால்​களை வழங்​கும். அவர்​களை சாதா​ரண​மாக எடுத்துக்​கொள்ள முடி​யாது. அவர்​களின் பேட்​ஸ்​மேன்​கள் சிறந்த ஃபார்​மில் உள்​ளனர்.

அவர்​களின் பந்து வீச்​சாளர்​கள் சிறப்​பாக செயல்படுகிறார்​கள். அவர்​கள் எதிரணி​யின் தவறுகளை பயன்​படுத்​திக் கொண்டு சரி​யான நேரத்​தில் தாக்​குதல் ஆட்​டம் தொடுப்​பார்​கள்.

மே.இ.தீவு​கள் அணி​யின் பேட்​டிங் அச்​சுறுத்​தலை சமாளிக்க இந்​தி​யா​வுக்கு ஒரு நல்ல திட்​டம் தேவைப்​படும். அவர்​களின் பேட்​ஸ்​மேன்​கள் முதல் பந்​திலிருந்தே அடிக்கத் தொடங்​கு​வார்​கள். அவர்​கள், காத்​திருக்க மாட்டார்​கள். இவ்​வாறு சுனில்​ க​வாஸ்​கர்​ கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top