ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஜம்மு-காஷ்மீர் அணி கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் அணிக்கு முதல்வர் அப்துல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், ”கோப்பையை வென்று சாதனை படைத்த ஜம்மு-காஷ்மீர் அணி வீரர்களை மனம் உவந்து பாராட்டுகிறேன். அவர்களது வரலாற்றுச் சாதனை வெற்றியால் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உத்வேகத்தாலும், பெருமையாலும் நிரம்பியுள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அணியினருக்கு பரிசாக ரூ.2 கோடி ரொக்க பரிசு வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
