மகளிர் பிரீமியர் லீக் தொடரின் நான்காவது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் வதோதராவில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 203 ரன்கள் எடுத்தது. அதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை சேஸிங் செய்த ஆர்சிபி அணி தொடக்க வீராங்கனையான கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்களில் நடையைக்கட்டினாலும், நிலைத்து நின்று அதிரடியாக விளையாடிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஜார்ஜியா வோல் தம் பங்கிற்கு 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்களுடைய அதிரயால் ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன்முலம், 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆர்சிபி அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

