jacob bethell

முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி

பர்மிங்காம்

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பர்மிங்காமில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஒவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 400 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 53 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் விளாசினார். பென்டகெட் 60, ஜோ ரூட் 57, கேப்டன் ஹாரி புரூக் 58, வில் ஜேக்ஸ் 39, ஜேமி ஸ்மித் 37, ஜாஸ் பட்லர் 37 ரன்கள் சேர்த்தனர்.

மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் ஜெய்டன் சீலல்ஸ் 4, அல்சாரி ஜோசப் 2 விக்கெட்களை வீழ்த்தினர். 401 ரன்கள் இலக்குடன் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 26.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு சுருண்டது.

அதிகபட்சமாக ஜெய்டன் சீல்ஸ் 29, கேப்டன் ஷாய் ஹோப் 25, கீசி கார்ட்டி 22, குடகேஷ் மோதி 18, அமிர் ஜாங்கோ 14, அல்சாரி ஜோசப் 12, பிரண்டன் கிங் 10 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி சார்பில் சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். ஆதில் ரஷித் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

238 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 10 என முனனிலை வகிக்கறிது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top