harbhajan singh

தோனியின் ரசிகர்கள் தானா சேர்ந்த கூட்டம்!

மும்பை

தோனியை விரும்பும் ரசிகர்கள் எல்லோரும் இயல்பாகச் சேர்ந்த கூட்டம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கூறும்போது, “எந்தவொரு கிரிக்கெட் வீரருக்காவது உண்மைமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது தோனி ஒருவருக்கே. மற்ற வீரர்கள் எல்லாம் பணம் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளனர்” என்றார்.

ஹர்பஜன் சிங்கின் இந்த சமூக பல்வேறு சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top