வாலிபால் பயிற்சி முகாம் தொடக்கம் !

சென்னை

சென்னை மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் 12 மற்றும் 13 வயது மாணவ, மாணவிகளுக்கு இலவச கோடைகால வாலிபால் பயிற்சி முகாமுக்கு 55 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இந்த பயிற்சி முகாம் கடந்த ஏப்ரல் 28-ம் தேதி முதல் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த முகாமினை நேற்று (மே 2) ரோமா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வி.எம்.ஏ. ராஜன், எஸ்டிஏடி முன்னாள் அதிகாரி மெர்சி ரெஜினா முறைப்படி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக்கான சீருடைகளை வழங்கினர்.

பயிற்சி முகாமில் மாணவ, மாணவியருக்கு தினமும் முட்டை, கடலை, மற்றும் ஊட்டச்சத்து பாணம் வழங்கப்படுகிறது, பயிற்சி முகாம் நிறைவில் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி முகாம் டிஏசி டெவலப்பர்ஸ், 2 குரோ ஹெச்ஆர் நிறுவனம், ரோமா குரூப், ஆதரவுடன் நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தினகர், பழனியப்பன் ஜெகதீசன், ஶ்ரீ கேசவன், பாக்கியராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top