PV Sindhu

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நிங்போ நகரில் இன்று (ஏப்ரல் 8) முதல் வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. ரூ.4.25 கோடி பரிசுத் தொகை கொண்ட இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் ஹெச்.எஸ்.பிரனாய், லக்சயா சென், கிரண் ஜார்ஜ், பிரியான்ஷு ரஜாவத் பங்கேற்கிறார்கள். உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் லக்சயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் லீ சியா ஹாவை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து, மாளவிகா பான்சோத், அனுபமா உபாத்யாயா, ஆகார்ஷி காஷ்யப் உள்ளிட்டடோர் களம் இறங்குகின்றனர். சிந்து தனது முதல் சுற்றில் சவாலை இந்தோனேஷியாவின் எஸ்தெர் நுருமியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ட்ரிஷா ஜாலி – காயத்ரி, ஸ்ருதி மிஸ்ரா – பிரியா ஜோடியும், ஆடவர் இரட்டையரில் ஹரிகரன் அம்சகருணன் – ரூபன் குமார், பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் – சாய் பிரதீக் ஜோடியும், கலப்பு இரட்டையரில் ரோஹன் கபூர்-ருத்விகா ஷிவானி, சதீஷ் கருணாகரன் – ஆத்யா வரியாத், துருவ் கபிலா – தனிஷா கிரஸ்டோ, ஆஷித் சூர்யா-அம்ருதா பிரமுதேஷ் ஜோடியும் களமிறங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top