இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல்டிராவிட், தற்போது ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக உள்ளார்.
மார்ச் 22ல் போட்டி தொடங்க உள்ள நிலையில் அதற்கான பயிற்சி முகாமில் ராகுல் டிராவிட் பங்கேற்கவில்லை. அவர் காயம் அடைந்து இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடும் போது டிராவிட்டிற்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும், அதனால் ஓய்வு எடுத்து வரும் வரும் விரைவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ராகுல்டிராவிட் அணியுடன் இணைந்தார். அவரது காலில் கட்டு போடப்பட்டு இருந்தது.