boxing

300 வீராங்கனைகள் டிஷ்யூம்..டிஷ்யூம்..

மார்ச் 21-ல் குத்துச்சண்டை தேசிய சாம்பியன்ஷிப், கிரேட்டர் நொய்டாவில் தொடங்குகிறது

புதுடெல்லி

300 வீராங்கனைகள் பங்கேற்கும் 8-வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வரும் மார்ச் 21 முதல் 27-ம் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரை உலக குத்துச்சண்டை மற்றும் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு ஆகியவற்றின் வழிகாட்டுதல்களின் கீழ் உத்தரபிரதேச குத்துச்சண்டை சங்கம் நடத்துகிறது.

இதில் 1984-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2005-ம் ஆண்டு டிசம்பர் 31 வரை பிறந்த வீராங்கனைகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில பிரிவும் அதிகபட்சம் 10 குத்துச்சண்டை வீராங்கனைகளை களமிறக்கலாம். இந்தத் தொடரில் பங்கேற்க வரும் 10-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து 15-ம் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். தொடக்க சுற்று போட்டிகள் மார்ச் 21 முதல் 24 நரை நடைபெறும்.

இதன் பின்னர் கால் இறுதி சுற்று 25-ம் தேதியும், அரை இறுதி சுற்று 26-ம் தேதியும், இறுதி சுற்று 27-ம் தேதியும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு போட்டியும் 3 ரவுண்டுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு மோதலுக்கும் ஒரு நிமிட ஓய்வுடன் 3 நிமிடங்கள் வழங்கப்படும். 10 புள்ளிகளை கட்டாயம் பெறும் வகையில் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தத் தொடரில் 300 வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். நடப்பு சாம்பியனாக ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம் உள்ளது. அந்த அணி கடந்த சீசனில் 5 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது. ஹரியானா 3 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 2-வது இடம் பிடித்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top