csk_8

180+ என்றாலே பயம்.. போராடுமா சிஎஸ்கே?

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் உள்ள முலான்பூரில் இன்று (ஏப்ரல் 8) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன.

5 முறை சாம்​பிய​னான சிஎஸ்கே இந்த சீசனை மும்பை அணிக்கு எதி​ராக வெற்​றி​யுடன் தொடங்​கிய சிஎஸ்கே அதன் பின்​னர் நடை​பெற்ற 3 ஆட்​டங்​களி​லும் தோல்​வியடைந்​தது. இந்த 3 ஆட்​டங்​களி​லுமே அந்த அணி இலக்கை துரத்த முடியாமல் தோற்றுள்ளது. இதில் 2 ஆட்​டங்​களை தனது கோட்டையான சேப்பாக்கத்தில் அந்த அணி விளை​யாடி​யிருந்​தது.

180 ரன்​களுக்கு மேல் இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்​டாலே சிஎஸ்கே வெற்றி பெறுவது இயலாத காரியமாக மாறி உள்ளது. இது கடந்த 10 ஆட்டங்களாக தொடர்வது ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது. நடப்பு சீசனில் மட்டும் பெங்​களூரு அணிக்கு எதி​ராக197 ரன்​கள், ராஜஸ்​தான்அணிக்கு எதி​ராக 183 ரன்​கள், டெல்லி அணிக்கு எதி​ராக 184 ரன்​கள் இலக்கை விரட்ட முடி​யாமல் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்துள்ளது. இலக்கை துரத்​தும் போது சிஎஸ்​கே​விடம் இருந்து எந்​த​வித போராட்ட குண​மும் வெளிப்​படாததே ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.

வெற்​றிக்​கான பிளேயிங் லெவனை கண்​டறிவதே சிஎஸ்​கேவுக்கு பெரிய Task-க்காக மாறி உள்​ளது. ராகுல் திரி​பா​தி, தீபக் ஹூடா, ஜேமி ஓவர்​டன், சேம் கரண் ஆகியோரை நீக்​கி​விட்டு டேவன் கான்​வே, முகேஷ் சவுத்​ரி, விஜய் சங்​கர் ஆகியோரை பயன்​படுத்​திய போதி​லும் சிஎஸ்கே அணி​யால் வெற்​றியை கொடுக்க முடியவில்லை. கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட், ஷிவம் துபே ஆகியோரும் நிலையாக விளையாடுவதில்லை. இவர்கள் இருவருமே எதிரணியினர் விரிக்கும் வலையில் சரியாக சிக்கி விக்கெட்டை பறிகொடுப்பது வாடிக்கையாக மாறி உள்ளது.

தற்போது சிஎஸ்கே 4 ஆட்​டங்​களில் விளை​யாடி ஒரு வெற்​றி, 3 தோல்​வி​யுடன் 2 புள்​ளி​கள் பெற்று புள்​ளி​கள் பட்​டியலில் 9-வது இடத்​தில் உள்ளது. இன்​னும் 10 ஆட்​டங்​களே மீதம் உள்​ளன. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும். இதற்கு பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே சாத்தியம். தற்போததைய நிலையில் இது நிகழ வேண்டுமானால் ஏதேம் மாயங்கள் ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top