சென்னை
தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 கூடைப்பந்து போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஏப்ரல் 3) ஆட்டத்தில் தமிழ்நாடு – பூட்டான் அணிகள் மோதின.இதில் 107-41 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் கொழும்பு பிசி அணியும் டி ரேக்ஸ் அணியும் மோதின.இதில் 79-74 என்ற புள்ளி கணக்கில் கொழும்பு அணி வெற்றி பெற்றது.