TNCA

ரஞ்சி கோப்பை: தமிழகம் 286 ரன்னுக்கு ஆல் அவுட்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு – ஒடிசா அணி​கள் இடையி​லான ஆட்​டம் புவனேஷ்வரில் நேற்று தொடங்​கியது. டாஸ் வென்ற ஒடிசா அணி பீல்​டிங்கை தேர்வு செய்​தது. இதையடுத்துபேட் செய்த தமிழ்​நாடு அணி முதல் நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 83 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்புக்கு 281 ரன்​கள் எடுத்​தது.

அதி​கபட்​ச​மாக பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 78, ஆந்த்ரே சித்தார்த் 56, ஆதிஷ் 50 ரன்​கள் சேர்த்​தனர். நாராயணன் ஜெகதீசன் 7, வித்​யூத் 12, குரு​சாமி அஜிதேஷ் 0, சோனு யாதவ் 8 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். நிதிஷ் ராஜகோ​பால் 54, கேப்​டன் சாய் கிஷோர் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்தனர். இன்று (23ம் தேதி) 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 86 ஓவர்களில் 286 ரன்களுக்கு ஆட்டமிந்தது,

நிதிஷ் ராஜகோபால் 54, சாய் கிஷோர் 12, திரிலோக் நாத் 1 ரன்னில் நடையை கட்டினர். ஒடிசா அணி தரப்​பில் ராஜேஷ் மொகன்​டி, தேபப்பிரதா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.  கோவிந்தா பாட்வார்   2 விக்​கெட்​களை கைப்பற்றினார்.  இதையடுத்து விளையாடிய ஒடிசா அணி 24 ஓவர்களில் 66 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top