ஐபிஎல் வரலாற்றில் இன்னும் ஒரு முறை கூட கோப்பையை ஏந்தாத அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி உள்ளது. இந்த அதிருப்தியிலேயே பல வருடமாக வகித்து வந்த கேப்டன் பதவியை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விராட் கோலி ராஜினாமா செய்தார்.
இந்த ஆண்டு அவர் மீண்டும் ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் பரவின. ஆனால் ரஜத் படிதார் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டனாக விராட் கோலி மறுத்தது ஏன் என்பது பற்றி ஆர்சிபி வீரர் ஜிதேஷ் சர்மா கூறுகையில்,’ இந்த சீசனிலும் ஆர்சிபியின் கேப்டனாக இருக்க விராட் கோலி. ரஜத் பாடிதார் கேப்டனாக வருவதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்தபோதுதான் நானும் தெரிந்துகொண்டேன்.
விராட் கோலி ஏன் கேப்டனாக விரும்பவில்லை என்று எனக்குத் தெரியவில்லை. கடந்த 2-3 ஆண்டுகளாக அவர் கேப்டனாக இல்லை. எனவே அவர் அதை இந்த ஆண்டும் கேப்டன் பதவியை விரும்ப மாட்டார் என்று உணர்ந்தேன். எனவே, ரஜத் படிதார் சிறந்த தேர்வாக இருப்பதாக நான் நினைக்கிறேன்’ என்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ்பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் கூறும்போது,’ ஆர்சிபி கேப்டன் பதவிக்கு விராட் கோலி பரிசீலிக்கப்பட்டார். அவரிடம் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தைப் பற்றிய விவாதங்களில் ஒரு மனிதனாக அவர் காட்டிய நேர்மை மற்றும் முதிர்ச்சியை நான் ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.
நான் அவருடன் பேசுவதை மிகவும் ரசித்தேன், அவர் இந்த ஐபிஎல் தொடரை எதிர்பார்க்கும் ஆற்றலும் ஆர்வமும் குறிப்பிடத்தக்க ஒன்று. அவர் ரஜத்தை விரும்புகிறார், ரஜத்தை மதிக்கிறார்’ என்றார்.