ஜகார்த்தா
இந்தோனேஷியா ஓபன் பாட்மிண்டன் தொடரின் 2-வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள தாய்லாந்தின் போர்ன்பாவீ சோச்சுவாங்குடன் மோதினார்.
l 78 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 22-20, 10-21, 18-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.
ஆடவர் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது டென்மார்க்கின் ராஸ்மஸ், ஃபெட்ரிக் சோகார்ட் ஜோடியை எதிர்த்து விளையாடியது.
ஒரு மணி நேரம் 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சாட்விக்-ஷிராக் ஜோடி 16-21, 21-18, 22-20 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது