Dhoni

தோனியை கட்டுப்படுத்த முடியுமா? மும்பை கேப்டன் ஸ்கை நெத்தியடி

சென்னை

ஐபில் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதரம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23-ம் தேதி) நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆட்டத்தில் தடை காரணமாக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. இதனால் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்பட உள்ளார். சிஎஸ்கே போட்டியையொட்டி நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சூர்யகுமார் யாதவ் (SKY) கூறியதாவது:

மும்பை அணியில் பேட்டிங் வரிசையில் நெகிழ்வுத்தன்மை இருப்பதை இந்த சீசனில் காணலாம். நான் 3-வது இடத்திலும், 5-வது இடத்திலும் பேட் செய்வேன். அதேபோன்று திலக் வர்மாவும் 5-வது இடத்திலும் பேட் செய்ய முடியும். எப்போதும் டாப்பிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவது நல்ல விஷயம். திலக் வர்மா, அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். இந்திய அணியைப் பொறுத்தவரை, அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்தால் நல்லது என்று நான் நினைத்தேன்.

அதனால் அந்த வரிசையில் அவரை, களமிறக்கினோம். நான் 4-வது இடத்தில் பொறுப்பை ஏற்க முடியும். என்னைப் பொறுத்தவரை பேட்டிங் எண் முக்கியமல்ல. நான் ஒரே பாணியிலேயே விளையாடுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறேன். திலக் வர்மாவும் அதையே செய்கிறார்.

ஜஸ்பிரீத் பும்ரா அற்புதமான வீரர். அவரது இடத்தை நிரப்புவது கடினம். ஆனால் காயம் என்பது விளையாட்டின் ஒரு அங்கம். நான் நன்றாக பயிற்சி செய்கிறேன் என்றால், வலைப்பயிற்சியில் பந்தை நன்றாக அடிப்பேன். களத்துக்குள் செல்லும்போது, என் மனம் தெளிவாக இருந்தால், நான் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும்.

அதுதான் எனக்கு இனிமையான தருணம். நான் நல்ல இடத்தில் இருக்கிறேன் என்று தெரிந்தால் அணிக்கு அதிக ரன்கள் கிடைக்கும். கடந்த 11 சீசன்களில் நாங்கள் முதல் ஆட்டத்தில் வெற்றி பெறவில்லை.

Sky 2

இதை இந்த சீசனில் மாற்ற முயற்சி செய்வோம். தொடரை வெற்றியுடன் தொடங்குவது எப்போதுமே முக்கியம். ஆனால் இது நீண்ட நாட்கள் நடைபெறும் தொடர். 14 லீக் ஆட்டங்கள், 2 பிளே ஆஃப் ஆட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆட்டத்தையும் புதிதாகவே எதிர்கொள்கிறோம்.

தோனியை இத்தனை ஆண்டுகளாக யாராலும் கட்டுப்படுத்த முடிந்ததா? நாங்கள் அவரிடம், அதிகம் கற்றுக்கொண்டுள்ளோம். இப்போதும் கற்று வருகிறோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவருடன் உரையாடுகிறோம். களத்தில் அவரை சந்திப்பதில் மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறேன்.

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top