pant

ரிஷப் பந்துக்கு ரூ.24 லட்சம் அபராதம் !

மும்பை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 27) நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த மும்பை அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது. ரியான் ரிக்கெல்டன் 32 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 54 ரன்களும் விளாசினர்.

ரோஹித் சர்மா 12, வில் ஜேக்ஸ் 29, திலக் வர்மா 6, கேப்டன் ஹர்திக் பாண்டியா 5, நமன் திர் 25 ரன்கள் சேர்த்தனர். லக்னோ அணி தரப்பில் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள மயங்க் யாதவ் 2 விக்கெட்களையும், அவேஷ் கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

216 ரன்கள் இலக்குடன் பேட் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஆயுஷ் பதோனி 35, மிட்செல் மார்ஷ் 34, நிகோலஸ் பூரண் 27, டேவிட் மில்லர் 24, ரவி பிஷ்னோய் 13 ரன்கள் சேர்த்தனர். எய்டன் மார்க் ரம் 9, கேப்டன் ரிஷப் பந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மும்பை அணி தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களை வீசி 22 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களையும் டிரெண்ட் போல்ட் 4 ஓவர்களை வீசி 20 ரன்களை வழங்கி 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். வில் ஜேக்ஸ் 2, கார்பின் போஷ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

மும்பை அணிக்கு இது 6-வது வெற்றியாக அமைந்தது. அந்த அணி 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5-வது தோல்வியை சந்தித்தது. அந்த அணி 10 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 5 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பந்த்துக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து ரூ.24 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது பிசிசிஐ. அதேவேளையில் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து தலா ரூ.6 லட்சம் அல்லது 25 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் எந்த தொகை குறைவாக இருக்கிறதோ அதை கட்ட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top